முடங்கிப் போகாமல் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கத் துடிக்கும் லட்சுமி

முடங்கிப் போகாமல் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கத் துடிக்கும் லட்சுமி

3 mins read
9649e5e3-e62c-4100-bdf4-2f09c27bfa46
-

அண்­மைய கால­மாக தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் நடந்­து­வ­ரும் பணி­நீக்­கம் ஊழி­யர்­கள் பல­ரைப் பாதித்­த­போ­தும் 22 வயது மகேஷ் நிவேதா லட்­சுமி இத்­து­றை­யில் திறம்­ப­டச் செயல்­படும் முனைப்­பில் இருக்­கி­றார். நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கணினி அறி­வி­யல் துறை­யில் பகு­தி­நேர இளங்­க­லைப் பட்­டப்­ப­டிப்பு பயின்று வரும் லட்­சுமி, இந்­நி­லையை அடை­வ­தற்­குப் பல இன்­னல்­க­ளைக் கடக்க வேண்­டி­யி­ருந்­தது.

தமி­ழ­கத்­தின் சென்­னை­யில் பிறந்து வளர்ந்த இவர், தனது 11 வய­தி­லேயே தந்­தை­யின் வேலை கார­ண­மாக சிங்­கப்­பூர் வந்­தார். லட்­சு­மி­யின் கல்­விப் பாதை சிங்­கப்­பூ­ரில் தொடங்­கி­யது.

நார்த்­லேண்ட் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் உயர்­நிலை ஒன்­றாம் வகுப்­பில் சேர்ந்­தார். தேர்­வில் சிறப்­புத் தேர்ச்சி பெறாத கார­ணத்­தால் அவர் சாதா­ரண நிலை தொழில்­நுட்­பப் பிரி­வுக்­குத் தள்­ளப்­பட்­டார். வகுப்­பில் இருக்­கும் மாண­வர்­க­ளு­டன் நட்பு கொள்ள திண­றிய லட்­சுமி, பள்­ளி செல்­ல­த் தயங்­கி­னார். உச்­ச­ரிப்பு கார­ணத்­தால் மற்ற மாண­வர்­க­ளின் கிண்­ட­லுக்­கும் ஆளா­னார்.

பள்ளி முடிந்து வீடு திரும்­பும் போதெல்­லாம் வேத­னை­யைச் சுமந்து வந்த லட்­சு­மிக்கு, அதே குமு­றல் வாழ்­வில் சாதிக்க உந்­து­த­லாக அமைந்­தது. ஓர் ஓரத்­தில் முடங்­கிப்­போ­கா­மல் ஆசி­ரி­யர்­கள் மற்­றும் மன ஆலோ­ச­கர்­க­ளின் உத­வியுடன் அவர் மீள முயன்­றார். தன் கவ­னத்­தைக் கல்­வி­யின் பக்­கம் திருப்­பி­னார்.

வழக்­க­நி­லைத் தேர்­வில் தேர்ச்­சி­பெற்று, தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பயின்­றார். குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­கள் சில­ரும் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­பு­ரி­வதால் அதைக் கண்டு உற்­சா­கம் அடைந்து தொழில்­நுட்­பக் கல்வி கழ­கத்­தில் தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறை­யில் நைடெக் சான்­றி­தழ் பெற்­றார் லட்­சுமி.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தி­லும் சிறப்­பா­கத் செய்­த­தால் அவர் தொடக்­க கட்ட சேர்க்கை நட­வ­டிக்கை மூலம் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்து தக­வல் தொழில்­நுட்­பத்தில் பட்­ட­யம் பெற்­றார்.

பட்­ட­யம் பெற்­ற­தும் லட்­சுமி பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மூலம் தேசிய கணினி அமைப்­பு­மு­றை­யில் (என்­சி­எஸ்) ஒரு முழு­நேர பணியை மேற்­கொண்­டார். இதில் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் பெரும்­ பங்­காற்­றி­யது. கல்­விப் பய­ணத்­துக்கு அதிக நேரத்தை அர்ப்­ப­ணிக்க வேண்டி இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரின் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டம் பெற வேண்­டு­மென்ற அடங்கா தீ லட்­சு­மி­ மன­தில் எரிந்­தது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயில்­வ­தற்கு முன்­ன­ரும் நேரத்­தைப் பய­னுள்­ள­தாக்­கிக்­கொள்ள எண்­ணிய லட்­சுமி, பகுதி­நே­ர­மாக இந்­தி­யா­வில் இயங்­கி­வ­ரும் 'ஸோஹோ கார்­ப்ப­ரே­ஷன்' நிறு­வ­னத்­தில் சிங்­கப்­பூ­ரில் இருந்­த­வாறே பணி­பு­ரிந்து தன் திறன்­களை வளர்த்­துக்­கொண்­டார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­று­வ­ரும் லட்­சுமி கடந்த ஒன்­றரை ஆண்­டாக முழு­நேர வேலையை வாரத்­திற்கு ஐந்து நாள்­கள் சமா­ளித்­துக்­கொண்டு படிப்­பில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

சிங்­கப்­பூ­ருக்கு வந்து வாழ்க்­கை­யில் தன்­னம்­பிக்­கை­யு­டன் நிற்க கற்றுக்­கொண்­டதை வரு­ணித்த லட்­சுமி, "12 வய­தில் உயர்­நி­லைப் பள்­ளி­யில் நடந்­ததை எண்ணி நான் கண்­ணீர் வடித்­தி­ருந்­தால் இன்று என் தங்­கைக்கு ஒரு முன்­மா­தி­ரி­யாக இருக்க முடி­யாது. சிங்­கப்­பூ­ரில் ஒரு எதிர்­க­லாத்தை அமைத்­துக்­கொண்டு முது­க­லைப் பட்­டம் பயி­லும் லட்­சி­யத்­து­டன் இருக்­கி­றேன்," என்­றார் லட்­சுமி.

தக­வல் தொழில்­நுட்­பத் துறை சார்ந்த பணி­நீக்­கம் தனது கன­வைச் சிதைக்­காது என்று உறு­திபட நம்­பும் லட்­சுமி, திறன் மேம்­பாட்­டில் ஈடு­பட்டு வந்­தால் இந்­தத் துறை­யில் நிலைத்து நிற்­க­லாம் என்று உறுதிபட நம்புகிறார்.

செய்தி: அனுஷா செல்­வ­மணி