தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தச்சுவேலையில் அலாதி இன்பம்

2 mins read
bd9ae5d1-e60c-46e5-a414-e376abd89cea
-

லோரோங் பக்­கார் பத்­து­வில் அமைந்­துள்ள ஓர் அமை­தி­யான பகு­தி­யில் ஜோஷுவா மரப்­ப­ல­கை­க­ளைத் துண்­டாக்கி வடி­வ­மைப்­ப­தைக் காண­லாம். கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக தச்சு வேலை செய்து வரு­கி­றார் 31 வயது ஜோஷுவா ராம் பிரகாஷ்.

வெறும் 40 வெள்ளி முத­லீட்­டில் யூடி­யூப், மர­வேலை தொடர்­பான புத்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றின் வழி­காட்­டு­த­லோடு தனது தொழி­லைத் தொடங்­கி­னார் ஜோஷுவா. '25 டிக்ரீ வுட்­வோர்க்ஸ்' எனும் அவ­ரது மர­வேலை வர்த்­த­கத்தை ஜோஷுவா தொடங்­கி­ய­போது அவ­ரின் கையில் சுத்­தி­யல், துளையிடும் கருவி ஆகிய அடிப்­ப­டைக் கரு­வி­கள் மட்­டுமே இருந்­தன. தற்­போது வீடு­க­ளுக்­கும் மற்ற வர்த்­த­கங்­க­ளுக்­கும் மர­வேலை தொடர்­பான திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­கி­றார் இவர்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் பயின்­று­வந்த ஜோஷுவா, தனது மூன்­றாம் ஆண்­டில் படிப்பை நிறுத்­திக்­கொண்டு திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். அப்­போது வரு­மா­னம் ஈட்­ட­வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது.

திடீ­ரென ஒரு நாள் மனைவி லவ்­லி­யு­டன் குடி­யி­ருந்த வாடகை வீட்­டில் மர­மேசை ஒன்­றைச் செய்­ய­வேண்­டும் என்ற ஆவல் அவ­ருள் எழுந்­தது. அதற்கு யூடி­யூப் கைகொ­டுத்­தது.

"நானே உரு­வாக்­கிய அந்த மேசை­யில் அமர்ந்­த­போது அதில் கிடைத்த இன்­பமே தனி," என்­றார் அவர்.

தச்­சு­வேலை துல்­லி­ய­மா­னது; நுணுக்­கங்­கள் நிறைந்­தது. சிங்­கப்­பூ­ரில் உள்ள தச்­சர்­கள் பல­ரும் தங்­க­ளது திற­மை­யைத் தொழில் ரக­சி­ய­மாக வைத்­துக்­கொள்­ளும் நிலை­யில் தச்­சு­வேலை தொடர்­பான நுட்­பங்­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தில் தான் சிர­மத்தை எதிர்­நோக்­கி­ய­தா­கக் கூறி­னார் ஜோஷுவா. சிறிய சமூ­க­மாக இருந்­தா­லும் போட்­டித்­தன்மை அதில் அதி­கம் எனக் குறிப்­பிட்­டார்.

"சில நேரங்­களில் என் வயதை அறிந்­த­தும் வாடிக்­கை­யா­ளர்­கள் திரும்­பிச் சென்­று­வி­டு­வார்­கள். சிலர், இந்­தி­யர் என அறிந்­த­வு­டன் பின்­வாங்கி­வி­டு­வார்­கள்," என்­றார் அவர்.

அமெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா நாடு­களில் உள்ள புகழ்­பெற்ற மர­வேலை கலை­ஞர்­களை நேரில் சென்று சந்­தித்­துள்ள ஜோஷுவா, உல­கெங்­கி­லும் இக்­க­லைக்கு உள்ள அங்­கீ­கா­ர­மும் வளங்­களும் தன்­னைப் பிரம்­மிக்க வைப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"தின­சரி நாம் பயன்­ப­டுத்­தும் வீட்­டுப் பொருள்­களை உரு­வாக்­கு­வ­தில் உள்ள உழைப்பை நாம் எண்­ணிப் பார்ப்­ப­தில்லை. இதை­யெல்­லாம் ரசிக்க வைக்­கிறது இந்­தத் தச்­சர் பணி," என்­றார் அவர்.

தொடர்ந்து சோதனை முயற்­சி­களை மேற்­கொண்டு தனது திறன்­களை வளர்த்­துக்­கொண்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார் ஜோஷுவா.