தன்முனைப்பு வெல்லும்

3 mins read
7cb0ccc1-385a-4189-9920-7e530f36ad87
-

சபிதா ஜெய­கு­மார்

தனி ஒரு­வ­ராக 2020ஆம் ஆண்­டில் புதிய நிறு­வ­னம் ஒன்­றைத் தொடங்­கச் சிர­மப்­பட்­ட­வர், கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்ட 'ஃபோர்ப்ஸ்' 30 வய­துக்­குக் கீழ் உள்ள 30 முன்­னணி இளை­யர்­கள் பட்­டி­ய­லில் இடம்­பி­டித்­துள்­ளார். 28 வயது விஷ்ணு சரண் தொடங்­கிய 'இன்­வி­ஜிலோ டெக்­னா­ல­ஜிஸ்', செயற்கை நுண்­ண­றி­வின் அடிப்­ப­டை­யில் காணொ­ளிப் பகுப்­பாய்வுக் கட்­ட­மைப்பு ஒன்றை வடி­வ­மைத்­துள்­ளது.

உட­னுக்­கு­டன் கண்­கா­ணிப்பு மேற்­கொண்டு கட்­டு­மா­னத் தளங்­கள் போன்ற உயர் அபா­யச் சூழல்­களில் பாது­காப்பை மேம்­படுத்­தும் நோக்­கில் துல்­லிய விவ­ரங்­க­ளைத் திரட்டி வழங்­கும் ஆற்­றல் அக்­கட்­ட­மைப்­புக்கு உண்டு.

இந்­தப் புத்­தாக்­கத் தொழில்­நுட்­பத்தை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் முத­லி­யவை நாடி­யுள்­ளன.

"ஒரு வேலை­யி­டத்­தில் முக்­கி­ய­மாக விளங்­கும் பாது­காப்பு அம்­சம், கட்­டு­மா­னத் துறை­யில் தொடர்ந்து ஒரு சவா­லாக உள்­ளது. இளம் வய­தி­லி­ருந்தே வேலை­யிட விபத்­து­க­ளைப் பற்றி நான் அறிந்­துள்­ளேன். இது தொடர்­பில் மாற்­றம் கொண்­டு­வர வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தேன்," என்று கூறி­னார் விஷ்ணு.

சிறு வய­தில் 'ஃபோர்ப்ஸ்' பட்­டி­யல் பற்றி கேள்­விப்­பட்ட அவர், தற்­போது அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளது தனக்­குப் பெருமை அளிப்­ப­தாக கூறி­னார்.

தனது 26வது வய­தில் 2020ஆம் ஆண்டு ஜூலை­யில் விஷ்ணு 'இன்­வி­ஜிலோ' நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார்.

நிறு­வ­னத்­தின் ஆரம்பக் காலத்­தில் அவ­ருக்­குத் துணை­யாக நிறு­வ­னர் குழு இல்லை. அச்­ச­ம­யத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றும் ஏற்­பட்­டது. மக்­கள் வீட்­டில் முடங்­கிக் கிடக்­கும் நிலை ஏற்­பட்­ட­து­டன் கட்­டு­மானப் பணி­களும் நிறுத்­தப்­பட்­டன. துவண்டு போன விஷ்ணு என்ன செய்­வது என்ற குழப்­பத்­தில் திண்­டா­டி­னார்.

"சாதித்­துக் காட்ட வேண்­டும் என என் முழு உழைப்­பை­யும் செலுத்தி நிறு­வ­னத்­திற்­காக போராட முடி­வெ­டுத்­தேன். என் கனவை நான் விட்­டுக் கொடுப்­ப­தாக இல்லை," என்­றார் விஷ்ணு.

தொடர்ந்து தடை­கள் பல அவர் பாதை­யில் குறுக்­கிட்­டன.

"இளை­யர் தொடங்­கிய தொழில் என நம்­பிக்­கை­யின்றி சேர்ந்த சில நாள்­க­ளி­லேயே ஊழி­யர்­கள் பலர் வேலையை விட்­ட­னர், துறை­யி­லி­ருந்த வய­தில் மூத்­த­வர்­கள் என்னை ஒதுக்­கி­னர்," என்று குறிப்­பிட்­டார் அவர்.

திரு கோ சை குவான், திரு ஆலன் லோ ஆகிய இரு­வ­ரும் வழி­காட்­டி­க­ளாக தன் வாழ்க்­கை­யில் வந்­தது ஒரு திருப்பு முனை­யாக அமைந்­தது.

"என்னைவிட என் மீது அதிக நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்­கள் இவர்­கள். என் மேல் ஆழ்ந்த நம்­பிக்கை கொண்டு நிறு­வ­னத்­தின் முதல் முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்க உத­வி­னர்," என்று தெரி­வித்­தார் விஷ்ணு.

அதை­ய­டுத்து டி. அனந்த குமார், 26, தலைமை தொழில்­நுட்ப அதி­காரி, முதன்மை செயற்கை நுண்­ண­றிவு பொறி­யி­ய­லா­ள­ராக ப்ரி­யான்ஷ் மிஸ்ரா, 25, முதன்மை செயற்கை நுண்­ண­றிவு ஆய்­வா­ள­ராக கோ ஜூன் ஹவ், 28 ஆகி­யோர் பக்­க­ப­ல­மாக இணைந்­து­கொண்­ட­னர்.

"வேலை­யி­டப் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கில் பெரு­ம­ள­வி­லான கட்­டு­மா­னத் திட்­டங்­களை மேற்­கொள்­ளும் நிறு­வ­னங்­கள் காணொ­ளிக் கண்­கா­ணிப்பை அடுத்த ஆண்டு ஜூன் முதல் கட்­டா­ய­மா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று அண்­மை­யில் மனி­த­வள அமைச்சு அறி­வித்­தது. இந்த மாற்­றத்­தில் எங்­க­ளுக்கு மகிழ்ச்சி," என்று பகிர்ந்து­கொண்­டார் விஷ்ணு.

"புது­மை­யான பாது­காப்­புத் தீர்­வு­கள், தொழில்­நுட்­பங்­கள் மூலம் பணி­யி­டப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக 'இன்­வி­ஜிலோ டெக்­னா­ல­ஜிஸை' பாராட்­டு­கி­றேன்," என்று கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் வாழ்த்­தி­யி­ருந்­தார்.

போட்­டித்­தன்மை மிகுந்த இன்­றைய உல­கில் இளை­யர்­கள் மீள்­தி­ற­னு­டன் தங்­க­ளின் கன­வு­களை நன­வாக்க உழைக்க வேண்­டும். வெற்றி பின்­னால் எந்­நே­ர­மும் ஓடா­மல் பல­வித அனு­ப­வங்­க­ளின் மூலம் தங்­களை மெரு­கேற்­றிக் கொள்ள வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார் விஷ்ணு.