அனைத்துலக கணினி நிரலாக்கப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்ற சிங்கப்பூர் மாணவர்

‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனம் நடத்திய அனைத்துலக ‘கோட்விட்டா’ எனும் கணினி நிரலாக்கப் போட்டியில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் வெனெஸ் விஜயா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஆகப் பெரிய கணினி நிரலாக்கப் போட்டி இது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்போட்டியில், 94 நாடுகளை சேர்ந்த 444,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இரு கட்டங்களைத் தாண்டி, ஒன்பது நாடுகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் மூன்றாமிடம் வென்றுள்ளார் வெனெஸ். இவருக்கு மூவாயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது.

உலகின் பல பகுதிகளில் பயிலும் மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர இந்தப் போட்டி சிறந்த களமாக அமைவதாக டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஹாரிக் வின் கூறினார்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு, டிசிஎஸ் நிறுவனத்தின் ஆய்வு புத்தாக்கக் குழுவில் உள்ளகப்பயிற்சி வாய்ப்பு அளிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!