மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழ் மூடப்படுகிறது என அதிர்ச்சித் தகவல்

கோலாலம்பூர் - உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு மூடப்படும் என மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் பழமையான தமிழ் நேசன் ஒரு காலக்கட்டத்தில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் வாசகர்களால் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்ட நாளிதழ்களில் ஒன்று.

உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிக்கைகள் கடும் வர்த்தகப் பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்டு வரும் வரிசையில் தமிழ் நேசனும் இணைகின்றது என்று மலேசியாவின் 'செல்லியல்' இணையத்தளம் குறிப்பிட்டது. 1979-ஆம் ஆண்டில் திரு ச.சாமிவேலு மலேசியாவின் மஇகா கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் தமிழ் நேசனை விலைக்கு வாங்கினார். அப்போது முதல், இப்போது வரை தமிழ் நேசன் திரு சாமிவேலு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்றும் செல்லியல் இணைத்தளம் தெரிவித்தது.

தற்போது மலேசியாவில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர் என குறைந்தது நான்கு நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவின் மிகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு நிறுத்தப்படும் எனும் செய்தி பல தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!