தெலுங்கில் அதிரடி நாயகனாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா.
ரசிகர்கள் அவரை பாலய்யா என்று அழைத்து வருகின்றனர்.
அவர் படங்கள் அதிரடியாக இருக்கும்.
கனல் கக்கும் சண்டைக் காட்சிகளுடன் அதற்கு ஏற்ற அதிரடி வசனங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், அவர் நடித்து 2021ஆம் ஆண்டில் வெளியான ‘அகண்டா’, தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது.
போயபட்டி ஸ்ரீனு இயக்கிய இப்படத்தில் பாலகிருஷ்ணா இரு வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவர இருக்கிறது. இப்படத்தில் பால கிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசை அமைத்துள்ள இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதியன்று வெளியிடப்பட இருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, தமிழில் அறிமுக விளம்பரக் காட்சியை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதில் பாலகிருஷ்ணா, ‘சவுண்டை கண்ட்ரோல்ல வச்சுக்கோ, எந்த சவுண்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்டுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது; உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது,’ என்று ஆவேசமாகப் பேசும் வசனம் வெளியாகி உள்ளது. இந்த வசனமும் அறிமுக விளம்பரக் காட்சியும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

