தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலன் எதிர்பாராமல் தன்னைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்த சைஃப் அலிகான்

1 mins read
5b62f91b-e58b-44d2-a23e-42e7d5643542
தனது உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சென்று சந்தித்தார் சைஃப் அலிகான். - படங்கள்: ரிபப்ளிக் ஊடகம்

மும்பை: இம்மாதம் 16ஆம் தேதியன்று பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

சைஃப் அலிகான் பிடிக்க முயன்றபோது அவரை அந்நபர் கத்தித்தகடால் (blade) பலமுறைக் குத்திவிட்டுத் தப்பியோடினார். சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன.

இதனால் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) வீடு திரும்பினார். கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு சைஃப் அலிகானை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மருவத்துவமனையில் அனுமதித்தார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பணம் ஏதும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைஃப் அலிகான், பஜன் சிங் ராணா என்ற அந்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்