லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கும் ரஜினி

லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கும் ரஜினி

1 mins read
8ec5dec4-479d-4647-8c4e-c8c9ac918487
லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன், ரஜினி, சுபாஷ் கரன். -

ரஜி­னி­யின் அடுத்த இரு படங்­களை­யும் லைகா நிறு­வ­னம் தயா­ரிக்க உள்­ளது உறு­தியாகிவிட்டது.

தற்­போது நெல்­சன் திலீப்­குமார் இயக்­கும் 'ஜெயி­லர்' படத்­தில் நடித்து வரு­கி­றார் ரஜினி. இதை சன் பிக்­சர்ஸ் தயா­ரிக்­கிறது.

அவற்­றுள் ஒரு படம் சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் வெளி­யான 'டான்' படத்தை இயக்­கிய சிபி சக்­க­ர­வர்த்­தி­யின் கைவண்­ணத்­தில் உரு­வா­கிறது.

மற்­றொன்றை 'கண்­ணும் கண்­ணும் கொள்­ளை­ய­டித்­தால்' படத்தை இயக்­கிய தேசிங்கு பெரி­ய­சாமி இயக்­கு­வார் என கூறப்­படு­கிறது.

இரு படங்­க­ளை­யுமே லைகா நிறு­வ­னம் தயா­ரிப்­பது என முடி­வாகி உள்­ளது.

இது தொடர்­பாக லைகா நிறு­வ­னத்­தின் தலை­வர் சுபாஷ்­கரன், தமிழ் கும­ரன், பிரேம் சிவ­சாமி ஆகி­யோர் ரஜி­னியை அவ­ரது இல்­லத்­தில் வைத்து சந்­தித்­த­னர். அதை­ய­டுத்து இப்­படங்­க­ளுக்கு நவம்­பர் 5ஆம் தேதி சென்­னை­யில் பூசை போடப்­ப­டு­கிறது.