காது கேளாத, வாய் பேச இயலாத நிலையில், ‘சூரியனும் சூரியகாந்தியும்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீஹரி.
ஏ.எல்.ராஜா இயக்கி உள்ள இப்படத்தில், ரிதி உமையாள் நாயகியாக நடிக்கிறார்.
சூரியன் மீது சூரியகாந்தி கொண்டுள்ள காதலைப்போல் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். சாதி எனும் பேய் குறுக்கே புகுந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அனைத்தையும் கடந்து காதலர்கள் ஒன்றுசேர்ந்தனரா என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர் ராஜா.
தமிழில் ஏற்கெனவே ‘நாடோடிகள்’ படத்தில் காது கேளாத, வாய் பேச இயலாத அபிநயா, இரு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.


