தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொல்லாடும் முன்றிலில் ஓவியருடன் கலந்துரையாடல்

1 mins read
63064477-9c27-4096-8f1d-add9af828adf
கலந்துரையாடலில் செம்பியன் திருமேனி நாவலுக்குக் கோட்டோவியங்கள் வரைந்த ஓவியர் நா. முத்துக்கிருட்டினன் பங்கேற்கிறார். - செய்தி, படம்: ஏற்பாட்டுக்குழு

சொல்லாடும் முன்றில் அமைப்பின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எழுத்தாளர் புதுமைத்தேனீ அன்பழகனின் செம்பியன் திருமேனி நாவலுக்குக் கோட்டோவியங்கள் வரைந்த ஓவியர் நா. முத்துக்கிருட்டினனுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். தேசிய நூலகத்தின் முதல் தளத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவலுக்கு அணுகவும்: 82377006

குறிப்புச் சொற்கள்