நிதி திரட்டாக அமைந்த தீபாவளிச் சந்தை கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 10 முதல் 8 மணி வரை சிண்டாவின் வளாகத்தில் நடைபெற்றது. ‘கிரியேட் எஸ்ஜி’ சமூக நிறுவனம் நடத்திய இந்நிகழ்வில் இல்லம் சார்ந்து இயங்கும் 62 வர்த்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
நேபால், கம்போடியா, சென்னை ஆகியவற்றில் உள்ள அனாதை இல்லங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்வி மற்றும் உணவு தொடர்பில் நிதி திரட்டுவதே இச்சந்தையின் முக்கியக் குறிக்கோள். சந்தையில் இடம்பெற்ற வர்த்தகங்கள் வழங்கிய வாடகைமூலம் நிதி சேகரிக்கப்பட்டது.
இச்சந்தை, இல்லம்சார் வர்த்தகங்கள் தங்களின் பொருள்களையும் சேவைகளையும் காண்பிக்க, ஒரு தளமாகவும் அமைவதாக ‘கிரியேட் எஸ்ஜி’ இணை நிறுவனர் குமரவேலு, 41, குறிப்பிட்டார். செல்வி தேவி விஜயன், 34 அவருடன் ‘க்ரியேட் எஸ்ஜி’யை 2018ல் நிறுவினார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, ‘கிரியேட் எஸ்ஜி’ சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சி குறித்து அறிவித்திருந்தது.
அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இதைவிடப் பெரிய சந்தையை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறது ‘கிரியேட் எஸ்ஜி’ .
மேல்விவரங்களுக்கு: https://kriyaidsg.com/, https://tinyurl.com/KriyaiD மற்றும் https://www.youtube.com/watch?v=bZPYIm_Ft5I