தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழிற்சங்கவாதிகள் மூவர் பெயரில் உபகாரச் சம்பளம்

3 mins read
65273b2f-db1c-477f-a54f-219c7b2357ff
தொழிற்சங்கவாதிகள் ஜி. முத்­து­கு­மா­ர­சாமி, ஆர்.கே.எஸ். நாச்சியப்பன், நித்­தி­யா­னந்­தன் ஆறு­மு­கம் நினைவாக உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. - படம்: தெமா­செக் அற­நி­று­வ­னம்

குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 38 மாண­வர்­க­ளுக்கு மறைந்த தொழிற்சங்கவாதிகள் ஜி. முத்­து­கு­மா­ர­சாமி, ஆர்.கே.எஸ். நாச்­சி­யப்­பன், நித்­தி­யா­னந்­தன் ஆறு­மு­கம் ஆகியோரின் நினைவாக அவர்கள் பெயர்களில் தெமா­செக் அற­நி­று­வ­னம் உபகாரச் சம்­ப­ளங்­களை வழங்கியது.

“இந்தத் தொழிற்சங்கவாதிகள் மூவருமே கல்வியையும் வாழ்நாள் கற்றலையும் வலுவாக ஆதரித்தவர்கள். குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் நலனுக்காகவும் அவர்களின் பணியிட மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்கள். இந்த உபகாரச் சம்பளங்களின் மூலம் அவர்களின் சேவை நினைவுகூரப்படும்,“ என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறினார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய வளாகத்தில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் உபகாரச் சம்பளம் வழங்கினார்.

இந்த உபகாரச் சம்பளங்களை பெறும் மாணவர்கள் அவர்களைப் போலவே சமூகத்திற்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்­வாண்டு தொடங்கி 2027ஆம் ஆண்டு வரை ஒவ்­வோர் ஆண்­டும் உயர்கல்வி நிலை­யங்­களில் பயி­லும் மொத்தம் ஏறத்தாழ 200 மாண­வர்­கள் இந்த உப­கா­ரச் ­சம்­ப­ளம் மூலம் பலனடைய உள்ளனர். மொத்தம் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான உபகாரச் சம்பளம் வழங்கப்படவுள்ளன.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க மாணவர்கள் ஒவ்­வோர் ஆண்­டும் $3,000 பெறுவர். அதேபோல் பலதுறைத் தொழிற்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் பயிலும் மாண­வர்­க­ள் ஒவ்­வோர் ஆண்­டும் முறையே $4,000 மற்றும் $5,000 பெறு­வர்.

இந்த உப­கா­ரச் ­சம்­ப­ளங்­க­ளைப் பெற்ற மாண­வர்­கள் உயர்­கல்வி முடிந்­த­தும் தெமா­செக் அறநிறுவனத்தில் சேர்ந்து பணி­பு­ரி­யத் தேவை­யில்லை.

மேலும், அந்த மாண­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­குத் தலா $2,000 பெறு­மா­ன­முள்ள குடும்ப அங்­கீ­கார விருதும் வழங்கப்பட்டன. இந்­தத் தொகை மாண­வர்­கள் கல்வி பயி­லும் கால­கட்­டத்­தில் ஒவ்­வோர் ஆண்­டும் கட்­டங்­கட்­ட­மாக வழங்­கப்­படும்.

மறைந்த தொழிற்சங்கவாதிகள் பெயர்களில் உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டது குறித்து அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திரு நித்­தி­யா­னந்­தனின் இளைய மகள் பிரவித்தா நித்­தி­யா­னந்­தன், 37 கூறுகையில், “எங்கள் குடும்பத்திற்கே மிகவும் பெருமையான தருணம். சமூகமே தன் குடும்பம் என்ற பரந்த நோக்கில் வாழ்ந்துசென்ற அப்பாவை கெளவரப்படுத்தியமைக்கு மிகுந்த நன்றி,” என்று கூறினார். தந்தையின் வழியில் ஐவரும் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் திரு நாச்சியப்பனின் துணைவியார் திருவாட்டி வனஜா நாராயணசாமி, 64, கூறுகையில், “சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு சிறந்த குடிமகனாகவே தன் இறுதிமூச்சு வரை என் கணவர் வாழ்ந்து காட்டினார். ஊழியர்களுக்கு தொண்டாற்றுவதையே வாழ்நாள் பணியெனக் கொண்ட அவரின் செயல்களை பாராட்டி வழங்கப்பட்டிருக்கும் இந்த உபகாரச் சம்பளம் இளம் தலைமுறையினரிடமும் அவரைக் கொண்டுசெல்லும்,“ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திரு முத்­து­கு­மா­ர­சாமி 2019ஆம் ஆண்­டில் தமது 68 வயதில் கால­மா­னார். நாட்சம்­பள ஊழியர்களுக்கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ராக அவர் பதவி வகித்தார். அந்­தத் தொழிற்­சங்­கம் 2021ஆம் ஆண்­டில் கலைக்­கப்­பட்டு பொது ஊழி­யர்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தொழிற்­சங்­கத்துடன் இணைக்­கப்­பட்­டது.

திரு நித்­தி­யா­னந்­த­னும் திரு நாச்­சி­யப்­ப­னும் மின்­சார, எரி­வா­யுத் துறை ஊழி­யர்­க­ளுக்­கான தொழிற்­சங்­கத்­தில் இருந்­த­வர்­கள். திரு நித்­தி­யா­னந்­தன் அதன் நிர்­வா­கச் செய­லா­ள­ரா­க­வும் திரு நாச்­சி­யப்­பன் அதன் முன்­னோடி உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்­த­னர். திரு நித்­தி­யா­னந்­தன் 2007ஆம் ஆண்­டில் 57 வய­தில் கால­மா­னார். திரு நாச்­சி­யப்­பன் 2021ஆம் ஆண்­டில் தம் 67வது வய­தில் காலமானார்.

ஆர்.கே.எஸ். நாச்­சி­யப்­பன் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் சத்தீஸ்வரன் செல்வராஜு, 28, “வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த எனக்கு இந்த உபகாரச் சம்பளம் மிகுந்த பயன்தரும். படித்து முடித்து திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நான் சமூகத்திற்கு என்னால் முடிந்தவற்றை உறுதியாகச் செய்வேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்