தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்தவர்களைக் கெளரவிக்கும் விதமாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு ‘நினைவின் தடங்கள்’ எனும் நிகழ்ச்சியை 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இவ்வாண்டு இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (டிசம்பர் 9) மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தேசிய நூலக வாரியத்தின் ‘தி பாட்’ அரங்கில் நடைபெறும்.
இவ்வாண்டு ஆ.பழனியப்பன், ந.பாலபாஸ்கரன், சை.பீர்.முஹம்மது, ரெ.சோமசுந்தரம், கலைச்செம்மல் ராம் நாராயணசாமி, பாத்தூறல் முத்துமாணிக்கம், எம்.கே.நாராயணன் உள்ளிட்ட ஒன்பது பேர் நினைவுகூரப்பட உள்ளனர்.