'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' கவிதை நூல்

'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' கவிதை நூல்

1 mins read
d0194ea0-52d4-4648-8363-d7b96639f3a5
கவி­ஞர் மனுஷ்­ய­புத்­தி­ரன் நூலை வெளி­யிட கவி­ஞர் பெருந்­தேவி முதல் பிர­தி­யைப் பெற்­றுக்­கொண்­டார். படம்: இன்பா -

யாவ­ரும் பதிப்­ப­கத்­தின் வெளி­யீ­டாக இன்­பா­வின் (படத்­தில் இட­மி­ருந்து நான்­கா­வ­தாக இருப்­ப­வர்) ஐந்­தா­வது நூலான 'லயாங் லயாங் குரு­வி­க­ளின் கீச்­சொ­லி­கள்' கவிதை நூல் இம்­மா­தம் இரண்­டாம் தேதி சென்னை பெசண்ட் நகர் ஸ்பே­சஸ் அரங்­கில் வெளி­யி­டப்­பட்­டது. தமிழ்க் கவிதை உல­கில் ஆக அதி­க­மான எண்­ணிக்­கை­யில் கவி­தை­களை எழு­திக்­கொண்­டி­ருக்­கும் தமி­ழ­கத்­தின் புகழ்­பெற்ற கவி­ஞர் மனுஷ்­ய­புத்­தி­ரன் நூலை வெளி­யிட கவி­ஞர் பெருந்­தேவி முதல் பிர­தி­யைப் பெற்­றுக்­கொண்­டார்.

கலை விமர்­ச­கர் இந்­தி­ரன், வெய்­யில், அமிர்­தம் சூர்யா ஆகி­யோர் வாழ்த்­துரை வழங்கி கவிதை­கள் குறித்து உரை­யாற்­றி­னர்.மனுஷ்­ய­புத்­தி­ரன் தனது உரை யில் பிரில் வைத்த குட்­டைப் பாவாடை கவி­தையை மிக­வும் ரசித்­த­தா­கக் குறிப்­பிட்­ட­தோடு ஓரிரு கவி­தை­களை வாசித்­தும் காட்­டி­னார். கலை விமர்­ச­கர், கவி­ஞர் இந்­தி­ரன் தனது உரை­யில், "சிங்­கப்­பூ­ரில் எழு­தப்­படும் கவி­தை­கள் தர­மான கவி­தை­க­ளாக இருக்­கின்­றன. அவற்­றுக்கு தமி­ழ­கத்­துக் கவி­ஞர்­க­ளின் தரச் சான்­றி­தழ் தேவை­யில்லை," என்­றார்.

அமிர்­தம் சூர்யா நூலை ஆய்வு செய்து கவி­தை­க­ளின் நுட்­பம் குறித்­தும் மொழி வளம் குறித்­தும் சிறப்­பா­ன­தொரு உரையை வழங்­கி­னார்.

வெய்­யில் தனது உரை­யில் திரு நக்­கீ­ரனின் காடோடி நாவ­லில் வரும் லயாங் குரு­வி­யைக் கவி­தை­யில் கொண்டு வந்து மறு அறி­மு­கம் செய்­தி­ருக்­கி­றார் இன்பா என்று தெரி­வித்­தார்.

இன்­பா­வின் ஏற்­பு­ரை­யோடு நிகழ்ச்சி நிறை­வு­பெற்­றது.