முதல்வரைக் கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

முதல்வரைக் கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

1 mins read

புது­டெல்லி: முதல்­வர் கெஜ்­ரி­வால் வீட்டை முற்­று­கை­யிட்டு பாஜ­க­வி­னர் நடத்­திய ஆர்ப்­பாட்­டம் கார­ண­மாக டெல்­லி­யில் பதற்­றம் நில­வி­யது.

அச்­ச­ம­யம் முதல்­வ­ரின் வீடு அமைந்­துள்ள பகு­தி­யில் இருந்த கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் உடைக்­கப்­பட்­டன. இது முதல்­வரைக் கொல்­வ­தற்­கான பகி­ரங்­கத் தாக்­கு­தல் என ஆம் ஆத்மி கட்சித்­ த­லைமை சாடி­யுள்­ளது.

முதல்­வ­ரின் வீட்­டுக் கதவு வரை பாஜ­க­வி­னர் முன்­னே­றிச் சென்று தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக டெல்லி துணை முதல்­வர் மனீஷ் சிசோ­டியா கூறி­யுள்­ளார்.

"பாஜக குண்­டர்­க­ளால் டெல்லி முதல்­வ­ரின் வீடு தாக்­கப்­பட்­டுள்­ளது. சமூக விரோத சக்­தி­க­ளால் முதல்­வர் வீட்­டின் பாது­காப்­புத் தடுப்பு­கள், கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

"காஷ்­மீர் பண்­டிட்­கள் மறு வாழ்­வுக்­காக குரல் கொடுத்­த­தற்­காக முதல்­வர் வீடு தாக்­கப்­பட்­டுள்­ளது," என்று மனீஷ் சிசோ­டியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், நாட்­டில் உள்ள இந்­துக்­களை கெஜ்­ரி­வால் அவமானப்­ப­டுத்­தி­ய­தாக பாஜக கூறி­யுள்­ளது.

டெல்லி சட்­டப்­பே­ர­வை­யில் 'தி காஷ்­மீர் ஃபைல்ஸ்' படத்­திற்கு மாநி­லத்­தில் வரி­வி­லக்கு அளிக்க வேண்­டும் என்று பாஜக எம்­எல்­ஏக்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்த முதல்­வர் கெஜ்­ரி­வால், காஷ்­மீர் பண்­டிட்­கள் பெய­ரில் சிலர் கோடிக் கணக்­கில் சம்­பா­திப்­ப­தா­கச் சாடியிருந்தார்.