பெற்றோரைக் கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு 15% ஊதியம் குறைப்பு: தெலுங்கானா

பெற்றோரைக் கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு 15% ஊதியம் குறைப்பு: தெலுங்கானா

2 mins read
3df535f1-11d6-447f-8f49-1052415b9518
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி. - படம்: இந்து தமிழ்த் திசை
multi-img1 of 3
Google News Preferred Icon

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநில அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் பெற்றோரைக் கவனிக்கவில்லையென்றால் அவர்களுடைய சம்பளத்தில் 15 விழுக்காடு குறைக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திங்கட்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்காக இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அந்த நிகழ்ச்சியில், அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு ரூ.50 கோடி மதிப்​புள்ள கருவி​களை வழங்​கி​னார்.

அந்த உரையில், “இந்த அரசு உங்களுக்காக உள்ளது என்பதை உரக்கக் கூறவே இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். மாற்றுத் திற​னாளி​கள் ஒரு​வருக்​கொரு​வர் திரு​மணம் செய்து கொண்​டால் அந்த இணையர்க்கு அரசு ரூ.2 லட்​சம் நிதி உதவி வழங்​கும். அதே சமயத்​தில், மாற்றுத் திற​னாளியை மணம் முடிப்பவருக்கு ரூ.2 லட்​சம் வழங்கப்​படும். அரசுப் பணி​யிலும் மாற்றுத்திற​னாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்​கப்​படு​கிறது.

இதே​போன்று விளை​யாட்டுத் துறை​யில் சாதிக்​கும் மாற்றுத் திற​னாளி​களுக்​கும் அரசுப் பணி ஒதுக்​கப்​படு​கிறது. மேலும் மூன்​றாம் பாலினத்​தவருக்​கும் அரசுப் பணி​யில் இட ஒதுக்​கீடு, இந்​திரம்மா வீடு​கள் வழங்​கப்​பட்டு வருகின்றன.

‘பிரணய்’ திட்​டம் மூலம் முதி​யோரைப் பாது​காக்க தெலுங்கானா அரசு தீர்​மானித்​துள்​ளது. அதனால், இனி பெற்​றோரை ஒதுக்கி வைத்​தாலோ, ஆதரவற்றோர் இல்​லங்​களில் சேர்த்​தாலோ கைவிட்​டாலோ அரசு ஊழியர்​களின் மாத ஊதி​யத்​தில் இருந்து 10 முதல் 15 விழுக்காடு பிடித்​தம் செய்​து, அந்தப் பணத்தை கைவிடப்​பட்ட பெற்​றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த ஏற்​பாடு செய்​யப்​படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் பெற்றோரைக் கைவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. “பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளை நாம்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும். பெற்றோர்களுக்குப் பயன்படாதவர்கள், சமூகத்திற்கும் பயனற்றவர்களே,” என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், “ஒவ்​வொருவருக்​கும் மருத்​துவ வசதி கிடைக்க வேண்​டும் என்​பதே என் லட்​சி​யம். சாதி​வாரிக் கணக்​கெடுப்​பு அறிக்​கை​யின்படி நம் மாநிலத்​துக்கு நிதி வழங்க வேண்​டும். நம்​முடைய பிடி​வாதத்​தால்தான் மத்​திய அரசு இறங்கி வந்து சாதி​வாரிக் கணக்​கெடுப்பு நடத்​துகிறது,” என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

குறிப்புச் சொற்கள்