பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் குடிநீரை வீணாக்கிய குற்றத்திற்காக 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கோடை தொடங்குவதற்கு முன்னரே வெப்பநிலை அதிகரித்துள்ளது. கோடைக்கால குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க பெங்களூரு குடிநீர் வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனக் குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிக்கு குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்குக் கூடுதலாக ரூ.500 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெங்களூரில் கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிநீரை வீணடிக்கும் செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.


