கோழிப்பண்ணையில் மூண்ட தீயில்7,000 கோழிகள் கருகி சாவு

1 mins read
3377e502-11b8-47de-8277-614170dfcab5
கோழிப் பண்ணையில் மூண்ட தீயில் கோழிகள் கருகி சாவு. - கோப்புப் படம்: ஊடகம்

ஹைதராபாத்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7,000 கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசம் அடைந்தன.

சொக்கநாதபுரம் ஊராட்சி, ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசிங்கம். விவசாயியான இவர் அங்குள்ள பர்மா காலனி என்ற இடத்தில் 2 இடங்களில் கொட்டகை அமைத்து அதில் 7,000 பிராய்லர் கோழிகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தார்.

சம்பவத்தன்று மாலையில் இந்தக் கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் கோழிகள் இருந்த 2 கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

அதில் இருந்த 7,000 பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன.

இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 58க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தினர்.

தீயில் எரிந்து கருகிய கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

இந்தத் தீ விபத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கொட்டகை, ரூ.18 லட்சம் மதிப்பிலான பிராய்லர் கோழிகள் என ரூ.40 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்