கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை மீட்ட காவல்துறையினர், நாய்களைக் கடத்தியதாக நால்வரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நாய்களை நாகாலாந்தில் நாய் இறைச்சிக்கு விற்பனை செய்யக் கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி சாப்பிடப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், 2023ல் கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

