மாணவியை உரிய இடத்தில் இறக்கிவிடாத பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் ரத்து

இரிட்டி (கேரளம்): பள்ளி மாணவியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாத தனியார்ப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமங்கள் ஒரு மாத காலத்திற்கு ரத்துசெய்யப்பட்டன.

இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், இரிட்டியில் நடந்தது.

பெரும்பரம்பையைச் சேர்ந்த அம்மாணவி, இரிட்டி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்தபின் வீடு திரும்புவதற்காக, இரிட்டி-ஸ்ரீகந்தபுரம் இடையே இயக்கப்படும் ‘விமல்’ பேருந்தில் அவர் ஏறினார்.

ஆனால், பெரும்பரம்பையில் இறங்க வேண்டிய அவரை, பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் மூன்று கிலோமீட்டர் தள்ளி, ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இறக்கிவிட்டனர்.

இதுகுறித்து அம்மாணவி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் ஹரீந்திரன், நடத்துநர் லிஜு இருவரின் உரிமங்களையும் ஒரு மாதகாலத்திற்குத் தற்காலிகமாக ரத்து செய்து, இரிட்டி வட்டாரப் போக்குவரத்துத் துணை அலுவலர் உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!