தமிழகத்துக்கான நீரைத் திறந்துவிட கர்நாடகவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கான நீரைத் திறந்துவிட கர்நாடகவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

1 mins read
96670bb9-4c7b-4ddf-aab7-c61b39243cb3
காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 50வது கூட்​டம் புதுடெல்​லி​யில் புதன்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்​றது. - படம்: தினமலர்

புதுடெல்லி: தமிழகத்திற்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 50வது கூட்​டம் புதுடெல்​லி​யில் புதன்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்​றது. அதில் தமிழகம், கர்​நாட​கா, கேரளா, புதுச்​சேரி ஆகிய பகுதிகளின் நீர்​வளத்​துறை அதி​காரி​கள் காணொளி வாயி​லாகப் பங்​கேற்​றனர்.

அப்​போது கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அமைந்த 4 அணை​களின் நீர்​மட்​டம், நீர்வரத்து, வெளி​யேற்​றம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

பின்​னர், தமிழக அரசின் சார்​பில், “கோடை காலம் என்​ப​தால் மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் குறைந்து வரு​கிறது. உச்ச நீதிமன்றம் பிறப்​பித்த உத்​தர​வின்​படி மே மாதத்​தில் தமிழகத்துக்கு கர்​நாடகா 2.5 டிஎம்சி நீரைத் திறந்​து​விட வேண்​டும்,” என வலியுறுத்​தப்பட்டது.

அதை ஏற்​று​கொண்ட காவிரி ஆணையத் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர், தமிழகத்​துக்கான காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்