காவலர்கள்போல் நடித்து ரூ.5.4 கோடி கொள்ளை

மும்பை: காவல்துறையினர்போல் நடித்து, தூதஞ்சல் நிறுவன காரை வழிமறித்து, ரூ.5.4 கோடியைக் (S$873,300) கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

தானே மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்ட அக்கொள்ளை தொடர்பில் வழக்கு பதிந்து, எட்டுப் பேர் கொண்ட கும்பலைக் காவல்துறை தேடி வருகிறது.

இம்மாதம் 14ஆம் தேதி இரவு ஜல்கானிலிருந்து மும்பை நோக்கி அவ்வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, இன்னோவா காரில் வந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பல் அதனை வழிமறித்தது.

அந்த வாகனத்தைச் சோதனையிடுவதுபோல் நாடகமாடிய போலிக் காவலர்கள், அதனுள் இரண்டு சாக்குப்பைகளில் இருந்த ரூ.5.4 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அக்கொள்ளை தொடர்பில் மார்ச் 17ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை அந்தக் கொள்ளைக் கும்பல்மீது வழக்கு பதிந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!