தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகன் திருமணத்தை எளிமையாக நடத்தி, ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கிய கௌதம் அதானி

1 mins read
2018f001-a93a-46fb-864a-63266c11333d
ஜீத் அதானி - திவாவுக்கு நடைபெற்ற திருமணத்தில் கௌதம் அதானியும் அவரது மனைவியும். - படம்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: தனது இளைய மகனின் திரு​மணத்தை எளிமையாக நடத்திவிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார் இந்தியாவின் முன்னணி தொழில​திபரும் அதானி குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி.

இந்த நன்கொடையின் பெரும்பாலான தொகை, மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள், திறன் மேம்​பாட்டு மையங்கள் கட்டு​வதற்காக வழங்​கப்பட உள்ளது.

“மக்கள் அனைவருக்​கும் குறைவான செலவில் உலகத் தரத்​திற்கு ஈடாக மருத்துவ வசதி​யும் கல்வி​யும் கிடைக்கவேண்​டும். இளைஞர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை மேம்​படுத்த வேண்​டும் என்பது​தான் தனது முக்கிய இலக்கு,” என்று கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

உலக கோடீஸ்​வரர்கள் பட்டியலில் இடம்​பெற்றுள்ள கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானிக்கும் சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவாவுக்கும் அகமதாபாத்​தில் கடந்த 7ஆம் தேதி திரு​மணம் நடைபெற்றது. இதில் மணமக்​களின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்​றனர்.

இந்த திரு​மணத்​திற்கு முன்ன​தாக கௌதம் அதானியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மங்கள் சேவா’ திட்டத்தின்படி, ஜீத் அதானி-​திவா தம்பதியர் ஆண்டு​தோறும் திரு​மணமாகும் 500 ​மாற்றுத் ​திறனாளி பெண்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நி​தி​யுதவி வழங்​கு​வார்​கள் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

குறிப்புச் சொற்கள்