தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

1 mins read
6e8eebb2-acb2-4582-b347-cc4286f62879
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துகிறது. - படம்: இந்திய ஊடகம்

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிரசாரக் கூட்டம் நடத்தியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்தனர்.

இந்நிலையில், அதுதொடர்பான வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன.

இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த 17ஆம் தேதி கரூர் வந்த சிபிஐ குழு​விடம், கரூர் காவல்துறை மற்​றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ஆவணங்​களை ஒப்​படைத்​தனர்.

இதையடுத்​து, சிபிஐ குழு​வைச் சேர்ந்த ஆய்​வாளர் மனோகரன், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 2ல் நீதிபதி சார்​ல்ஸ் ஆல்​பர்ட் முன்​னிலை​யில் முதல் தகவல் அறிக்​கையைக் கடந்த 22ஆம் தேதி தாக்​கல் செய்​தார்.

அதில், கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி. ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் என்​. ஆனந்த், இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் மற்​றும் தவெக​வினர் பலர் எனக் குறிப்​பிட்​டு, விசா​ரணை​யைத் தொடர உள்​ள​தாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 1ல் சிபிஐ தாக்​கல் செய்​துள்ள முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கேட்டு தவெக வழக்​கறிஞர்​கள் மனு தாக்​கல் செய்​தனர். இதையடுத்​து, அந்த நகல் அவர்​களிடம் வழங்​கப்​பட்​டது.

குறிப்புச் சொற்கள்