இந்தியா: 168 டன் தங்கம் மீட்பு

இந்தியா: 168 டன் தங்கம் மீட்பு

1 mins read
cda096e0-4b23-4cd5-ba82-5b72d0c4d29c
இந்தியா, வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள 168 டன் தங்கத்தை மீட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்து தமிழ்திசை

மும்பை: இந்தியாவின் மத்திய வங்கி, வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட 168 டன் தங்கத்தை மீட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரேன் போர் மூண்ட பிறகு ரஷ்​யா​வின் டாலர் கையிருப்பை அமெரிக்கா முடக்​கியது.

இதையடுத்​து, வெளி​நாடு​களில் முதலீடு செய்யப்பட்ட தங்​கத்தை தாயகம் கொண்டு வரும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி ஈடுபட்டது.

இதன்​படி, கடந்த வியாழக்​கிழமை வெளி​யிடப்​பட்ட தரவு​களின்​படி 2025-26 இடையே பேங்க் ஆஃப் இங்​கிலாந்து மற்​றும் பேங்க் ஃபார் இன்​டர்​நேஷனல் செட்​டில்​மென்ட்ஸ் ஆகிய​வற்​றில் வைக்​கப்​பட்​டிருந்த 104.23 டன் தங்​கத்தை ரிசர்வ் வங்கி இந்​தி​யா​வுக்கு கொண்டு வந்​துள்​ளது. முன்​ன​தாக ஆண்​டின் முதல் பாதி​யில் 63.83 டன் தங்​கம் கொண்டு வரப்​பட்​டது.

ஒட்​டுமொத்​த​மாக, 2025-26 நிதி​யாண்​டில் ரிசர்வ் வங்கி 168.06 டன் தங்​கத்தை இந்​தி​யா​வுக்கு கொண்டு வந்​துள்​ளது.

இதற்கு முன்பு 2023-24ல் 107.21 டன் தங்கமும் 2024-25ல் 103.68 டன் தங்கமும் இந்​தி​யா​வுக்குக் கொண்டு வரப்​பட்​டது.

ரிசர்வ் வங்​கி​யின் மொத்த தங்கக் கையிருப்பு 880.52 டன். இதன் மதிப்பு ஏப்​ரல் 17 நில​வரப்​படி 122 பில்​லியன் டாலர் ஆகும். இதில் இப்​போதைய நில​வரப்​படி 77 விழுக்காடு தங்​கம் இந்​தி​யா​வில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மார்ச் 2023ல் இது வெறும் 38 விழுக்காடாக மட்​டுமே இருந்​தது. எஞ்சிய 23 விழுக்காடு தங்​கம் மட்​டுமே வெளி​நாட்​டில் உள்​ளது.

குறிப்புச் சொற்கள்