புழுங்கல் அரிசி ஏற்றுமதி வரி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: புழுங்கல் அரிசிக்கான 20 விழுக்காடு ஏற்றுமதி வரியை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டில் போதிய அளவு அரிசி இருப்பில் உள்ளதை உறுதிப்படுத்தி, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலில் இம்மாதம் 16ஆம் தேதியுடன் அது நடப்பிலிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாசுமதி அரிசி தவிர்த்த மற்றவகை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மற்ற நாடுகளின் உணவுத் தேவைகளையும் கருத்தில்கொண்டு, அந்நாட்டு அரசுகளின் வேண்டுகோள்களின் அடிப்படையில் அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு அனுமதித்து வருகிறது.

அவ்வகையில், சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரிசி ஏற்றுமதித் தடையிலிருந்து சிங்கப்பூருக்கு இந்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!