தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீன எல்லையில் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தியா

1 mins read
f9ef1dbb-d8e4-4b6e-92bf-7d809bace1f0
கடந்த 10 ஆண்​டு​களாக இந்திய அரசு அதன் எல்லை வட்டாரங்களில் 9,984 கிலோ மீட்​டர் தூரத்துக்கு நெடுஞ்​சாலை அமைத்​துள்​ளது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: சீனா, பங்ளாதே‌ஷ், மியன்​மார், பூட்டான் அரு​கே​யுள்ள தனித்​தனி​யான பகு​தி​களை இணைக்​கும் வகை​யில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு ரயில் பாதை அமைப்பதற்கு இந்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இந்தச் செய்தியை வர்த்தகச் செய்​தி​களை வெளி​யிடும் புளூம்​பர்க் நிறு​வனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்​டு​களாக இந்திய அரசு ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் செலவு செய்​து, 9,984 கிலோ மீட்​டர் தூரத்திற்கு நெடுஞ்​சாலை அமைத்​துள்​ளது. தற்​போது கூடு​தலாக 5,055 கிலோ மீட்​டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்​கும் பணி நடை​பெற்​று​ வரு​கிறது.

சீன எல்லை அருகே கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​து​வதன் மூலம் மக்​கள் போக்​கு​வரத்து அதி​கரிக்​கும். நெருக்​கடி​யான நேரங்​களில் அவசர நடவடிக்கைகளை மேற்​கொள்​ள​வும் உதவும் என இந்திய அரசாங்கம் நினைக்கிறது.

டோக்​லாம் அருகே எல்​லையை ஒட்டி 1,450 கிலோ மீட்டர் தூரத்துக்குப் புதிய சாலைகள் அமைத்து முக்​கிய பகு​தி​களில் இணைப்பை ஏற்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வடகிழக்குப் பகு​தி​யில் கடந்த 10 ஆண்​டு​களில் 1,700 கிலோ மீட்டர் தூரத்​துக்கு ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

எல்லைப் பகுதிகளில் ராணுவப் படைகள் வேகமாகச் சென்றடைய இந்த வளர்ச்சிப் பணி​கள் மேற்​கொள்ளப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்