புதுடெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், 29 ரயில் சேவையும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியில் கடந்த சில நாள்களாகவே பல இடங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் 29 ரயில்கள் வியாழக்கிழமை (ஜனவரி 16) தாமதமாகக் கிளம்பும் என இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலில், “வாகனவோட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்டவேண்டும். பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்கள், ரயில்வே துறையினரிடம் தொடர்பு கொண்டு, தங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

