அருணாச்சல், நாகாலாந்துக்கு வெள்ள நிவாரண உதவி: மோடி உறுதி

அருணாச்சல், நாகாலாந்துக்கு வெள்ள நிவாரண உதவி: மோடி உறுதி

1 mins read
6428e8be-d173-4c43-b170-639feefae68c
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியப்​ பிரதமர் நரேந்​திர மோடி. - படம்: நரேந்​திர மோடி/எக்ஸ்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்​தில் பரு​வ​மழை தீவிரமடைந்திருக்​கிறது. இதனால் அந்த மாநிலத்​தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்​கப்​பட்டு உள்​ளன.

மழை, வெள்ளத்தால் இது​வரை 7 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்; கிட்டத்தட்ட ஒரு லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர்; 19 நீர்​மின் நிலை​யங்​கள், 150 சாலைகள், 19 பாலங்​கள் வெள்​ளத்​தால் சேதமடைந்​துள்​ளன.

அதேபோல், நாகாலாந்​தில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் இது​வரை 11 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மோன், திமாபூர், மோகாக்​சங் உள்ளிட்ட மாவட்​டங்​களில் நிலச்​சரிவு​ ஏற்​பட்டு 29வது தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டுள்​ளது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்​ பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் வியாழக்கிழமை (ஜூலை 30) சந்​தித்​துப் பேசினர்.

அதனைத் தொடர்ந்து, வெள்ள நிவாரணப் பணி​களில் இரு மாநில அரசுகளு​டன் இணைந்து மத்​திய அரசு செயல்​படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, “வெள்​ளத்​தால் பாதிக்கப்பட்ட அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவி​களை​யும் வழங்குவதாகப் பிரதமர் மோடி உறுதி அளித்​துள்​ளார்,​” என்​று தெரிவித்தார்​.

குறிப்புச் சொற்கள்