புதுடெல்லி: வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் குறையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் பங்களிப்பு 38 விழுக்காடாக உள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணம் கணிசமாகக் குறையும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பூனம் குப்தா, கடந்த மார்ச் மாதத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்கள் அனுப்பிய பணம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது என்றார்.
இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“கொரோனா பெருந்தொற்று காலத்தையே வெற்றிகரமாக கடந்து வந்துவிட்டோம். ஈரான் போரால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
“இவ்வாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருக்கும். பணவீக்கம் 4 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும்,” என்று மத்திய வங்கியின் ஆளுநர் பூனம் குப்தா தெரிவித்தார்.

