ஆக்ராவில் தாயும் மகளும் போர்வைக்குள் சடலங்களாக மீட்பு

1 mins read
e7c747ef-d2be-49d4-be1f-dd23186e4d2e
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததாகக் காவல்துறை கூறியது. - படம்: இணையம்

ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இரவு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சுமார் நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததாகக் காவல்துறை கூறியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது, அறைக்குள் ஷபினா மற்றும் அவரது மகள் இனயாவின் உடல்கள் இருப்பதைக் கண்டனர்.

பின்னர் அவை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் ஷபினாவின் கணவர் ரஷீத்தை காணவில்லை. ஷபினா அவரது இரண்டாவது மனைவி.

ரஷீத் தனது மனைவியையும் வளர்ப்பு மகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குற்றவாளியைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்