நந்தனம் மெட்ரோ ரயில் தலைமையக வளாகத்தில் புதிய பூங்கா

1 mins read
451b5deb-ec41-4cce-8c71-29620d1a3410
புதிய பூங்காவைத் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (நடு) - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் நந்​தனம் வட்டாரத்​தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலு​வலக வளாகத்​தில் புதிய பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பூங்கா என்று அழைக்கப்படும் அதில் விளை​யாட்டுத் திடல்கள் உள்ளன. பூங்காவை மாநிலத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் திறந்துவைத்​தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமையகம் நந்​தனத்​தில் இருக்கிறது. அங்கு மொத்​தம் 3,750 சதுரமீட்​டர் பரப்​பள​வில், 3.50 கோடி ரூபாய் செலவில் பூங்காவும் விளை​யாட்டுத் திடல்களும் நிறுவப்பட்டுள்ளன.

விளையாட்டுத் திடல்களில் பேட்மின்டன் விளை​யாட்டு அரங்​கு​கள் மூன்றும், பிக்கிள் பந்து விளை​யாட்டு அரங்​கு​கள் இரண்டும், திறந்​தவெளி உடற்​ப​யிற்சிக் கூடமொன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மெட்ரோ பூங்​காவைச் சுற்றி 370 மீட்டர் நீளத்​திற்கு நடைபாதை, சிறு​வர்​கள் விளை​யாட்டுப் பகு​தி, கழிவறை​கள், வாக​ன நிறுத்​து​மிடம் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.

பூங்காவில் மழை நீரைச் சேகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் செடிகொடி, மரங்களிலிருந்து உதிரும் இலை, தழைகளை உரமாக்கவும் குழிகள் இருக்கின்றன. பூங்காவையும் விளையாட்டு அரங்குகளையும் பொதுமக்கள் நன்கு பயன்படுத்துவதற்கு வசதியாக அண்ணாசாலையையொட்டி நுழைவாயிலொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்