‘துரந்தர்’ படத்தின் லாபத்தைக் கேட்கும் பாகிஸ்தான் மக்கள்

துரந்​தர் படம் வசூலில் ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது

‘துரந்தர்’ படத்தின் லாபத்தைக் கேட்கும் பாகிஸ்தான் மக்கள்

1 mins read
7b05f521-7e4f-4a01-95bc-94488301170d
பாகிஸ்​தான் நாட்​டின் கராச்சி அரு​கே​யுள்ள லியாரி பகு​தி​. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அண்மையில் வெளியான துரந்​தர் படம் வசூலில் ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்​திய உளவாளி பாகிஸ்​தானில் நடத்​தும் உளவு வேலைகளை மைய​மாகக் கொண்டு எடுக்​கப்​பட்ட இந்தி திரைப்​படம் துரந்​தர். இதில் சில உண்மைச் சம்பவங்களும் உள்ளன.

கதாநாயகன் பாகிஸ்​தான் நாட்​டின் கராச்சி அரு​கே​யுள்ள லியாரி பகு​தி​யில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​படும் கும்​பலுக்​குள் ஊடுருவி உளவு நடவடிக்​கையை மேற்​கொள்​கிறார்.

இந்நிலையில், லியாரி பகு​தியை மைய​மாக கொண்டு எடுக்​கப்​பட்ட படம் பலகோடி வரு​வாயை ஈட்​டி​யுள்​ள​தால், இதில் 80 விழுக்காட்டு வரு​வாயை லியாரியின் வளர்ச்சித் திட்​டங்​களுக்கு வழங்க வேண்​டும் என அப்​பகுதி மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இது குறித்த காணொளியும் சமூக ஊடகத்​தில் வெளி​யாகி​யுள்​ளது.

லியாரி பகுதி மக்​கள் அளித்​துள்ள பேட்​டி​யில், “லியாரி பகு​தியை பின்​னணி​யாகக் கொண்டு எடுக்​கப்​பட்ட படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வரு​வாய் ஈட்​டி​யுள்​ளது. இதன் மூலம் மிக​வும் பின் ​தங்​கிய நிலை​யில் இருக்​கும் லியாரி பகுதி மக்​கள் பயனடைய வேண்​டும். இப்​பகு​தி​யில் உள்ள மோச​மான சாலைகள் மற்​றும் கட்டமைப்புகளை மேம்​படுத்த, துரந்​தர் படத்​தின் லாபத்தை வழங்க வேண்​டும்” என கூறி​யுள்​ளனர்.

பாகிஸ்​தானின் லியாரி பகுதி மக்​களின் கோரிக்கை குறித்து ‘துரந்​தர்’ படத்​தின் இயக்​குநர் ஆதித்யா தர் மற்​றும் தயாரிப்​பாளர்​கள்​ எந்​த பதி​லும்​ அளிக்​க​வில்​லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்