தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயிலில் படுக்கை விரிப்பு, கம்பளிப் போர்வையைத் திருடிய பயணிகள் சிக்கினர்

2 mins read
7311e411-d2fb-4a00-9731-5d2bd6c4db9c
பூரியி​லிருந்து டெல்​லிக்கு செல்​லும் புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லின் முதல் வகுப்பு பெட்​டி​யில் பயணம் செய்த ஒரு பெண்​ணும் 2 ஆண்​களும் தங்களுக்கு வழங்கப்பட்ட படுக்கை விரிப்பு, கம்பளிப் போர்வையைத் திருடினர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்​லி - ஒடிசா புருசோத்​தம் விரைவு ரயிலின் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்புப் பெட்​டி​யில் பயணம் செய்த பயணி​கள் சிலர் படுக்கை விரிப்​பு, கம்​பளிப் போர்வை ஆகிய​வற்றை தங்​கள் பைகளில் எடுத்​துச் சென்று சிக்​கினர்.

தொலைதூர ரயி​லில்​களில் தூங்​கும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பெட்​டி​யில் பயணம் செய்​யும் பயணி​களுக்குப் படுக்கை விரிப்​பு​கள், கம்​பளிப் போர்வைகள் ஆகியவை வழங்​கப்​படும்.

இரவில் தூங்​கும்​போது பயன்​படுத்​தியபின், பயணி​கள் அவற்றைத் தங்கள் இருக்​கை​யில் வைத்துவிட்டுச் செல்​வது வழக்கம்.

பூரியி​லிருந்து டெல்​லிக்குச் செல்​லும் புருசோத்​தம் விரைவு ரயி​லின் முதல் வகுப்புப் பெட்​டி​யில் ஒரு பெண்​ணும் இரு ஆண்​களும் பயணம் செய்​தனர்.

அவர்​கள் டெல்​லி​யில் இறங்​கும்​போது தங்களுக்கு வழங்கப்பட்ட படுக்கை விரிப்​பு​களை​யும் கம்​பளிப் போர்வைகளையும் மடித்து தாங்​கள் கொண்டு வந்த பைகளில் வைத்​துள்​ளனர்.

இதைப் பார்த்த ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் மற்​றும் உதவி​யாளர், அந்தப் பயணிகளிடம் படுக்கை விரிப்​பு​கள் மற்​றும் கம்​பளியை இது​போல் திருடு​வது நியா​யமா எனக் கேட்​டுள்​ளனர்.

அவற்றைத் திருப்பிக் கொடுங்​கள் அல்​லது ரூ.780 அபராதம் செலுத்​துங்​கள் எனக் கூறி​யுள்​ளனர்.

அப்​போது அந்தப் பயணி​களில் ஒரு​வர், தனது தாய் தவறு​தலாகப் படுக்கை விரிப்பை மடித்து பையில் வைத்​து​விட்​டார் எனக் கூறி சமாளித்​தார்.

அவர்​களைப் பயணச்சீட்டு பரிசோதகரும் ரயில்வே உதவி​யாளரும் எச்​சரித்து அனுப்​பினர்.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்​தில் பரவியது. காணொளியைப் பார்த்த பலர், “ரயிலின் முதல் வகுப்​பில் பயணம் செய்​வது பெரு​மை​யான விஷ​யம்.

“ஆனால், அதில் பயணம் செய்​பவர்​கள் திருடு​வது மிக​வும் கீழ்​த்தர​மான செயல்,”​ என விமர்​சித்தனர்​.

குறிப்புச் சொற்கள்