ஒரு இட்லி ரூ.315: இணையத்தில் பரவலான விமானப் பயணியின் பதிவு

ஒரு இட்லி ரூ.315: இணையத்தில் பரவலான விமானப் பயணியின் பதிவு

1 mins read
7b5c10ac-2d97-402e-a0a9-49e5c65d476d
பெங்களூரு விமான நிலையத்தில் உணவு பொருள்களின் விலை அதிகமாக உள்ளதாகப் பயணி புகார். - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஒரு இட்லி 315 ரூபாய்க்கு விற்கப்​படு​வதாகப் பயணி ஒருவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இணையத்தில் வெளியிட்ட பதிவு பரவலானது. விமான நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலை ஆக அதிகமாக உள்ளதாக இணையவாசிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

ரெட்​டிட் சமூக ஊடகத்தில் அப்பயணி வெளியிட்ட பதிவில், பெங்​களூரு கெம்பே கவுடா அனைத்துலக விமான நிலை​யத்​தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் தாம் ஒரு தட்டு நெய் பொடி இட்லி சாப்​பிட்​டதாகவும் அதன் விலை 315 ரூபாய் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெங்​களூரு மாநகரத்​தில் விற்கப்படுவதை​விட விமான நிலையத்தில் நான்கு மடங்கு கூடு​தலான‌ விலை​யில் உணவுப் பொருள்​கள் விற்​கப்​படு​கின்​றன என்றும் இந்த மோசடி தடுத்து நிறுத்​தப்பட வேண்​டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தப் பதிவு இணையத்தில் பரவலான நிலை​யில், ஏராள​மானோர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தை விமர்​சித்​துள்​ளனர். அவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு கொண்டுவரவேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்