அரசுப் பள்ளிகளுக்கே முன்னுரிமை: தெலுங்கானா சிற்றூரினர் தீர்மானம்

அரசுப் பள்ளிகளுக்கே முன்னுரிமை: தெலுங்கானா சிற்றூரினர் தீர்மானம்

1 mins read
5c732341-9b81-46e4-b576-1d31fc796b18
தெலுங்கானாவின் லட்சுமண் சந்தா என்னும் சிற்றூர் மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். - படம்: இந்து தமிழ் திசை

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஒரு சிற்றூரில் வசிக்கும் மக்கள், தங்களுடைய பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

நிர்மல் மாவட்டத்தில், லட்சுமண் சந்தா என்னும் சிற்றூர் உள்ளது. அந்தச் சிற்றூர் மக்கள், அண்மையில் ஒன்றுதிரண்டு, தங்களின் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அந்தச் சிற்றூரில் வசிப்போர் பெரும்பாலும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் அனைவருடைய பிள்ளைகளையும் தனியார் பள்ளிக்கு அனுப்புவதைக் காட்டிலும் சிறந்த வசதிகளைக் கொண்ட அரசாங்கம் நடத்தும் பள்ளிகளிலேயே சேர்த்துப் படிக்கவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

அரசுப் பள்​ளி​களில்​தான் நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்​கள், பிள்​ளை​கள் விளை​யாடுவதற்கு நல்ல விளையாட்டுத்தளம், அறி​வியல் சோதனைக் ​கூடம் என பல்வேறு வசதி​கள் உள்​ளன. எனவே தங்​கள் பிள்​ளை​களை அரசுப் பள்ளி​களில் சேர்க்க முடிவு செய்​த​தாக அப்​பகு​தி​யின் ஊராட்சி மன்றத் தலைவி படிகலா லட்​சுமி தெரி​வித்​துள்​ளார்​.

குறிப்புச் சொற்கள்