திருவனந்தபுரம்: தமிழகத்துக்குரிய நீர்ப்பங்கை முழுமையாகத் தர கேரளா தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் வி.டி. சுதீசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கான முழு நீர்ப் பங்கையும் வழங்க கேரளா தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அணையின் வடிவமைப்பு, இடத் தேர்வு, கட்டுமானப் பணிகளைத் தமிழகமே மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான முழுச் செலவையும் கேரளம் ஏற்கும் என்றும் முதல்வர் சுதீசன் தமது பதிவில் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கி வைப்பது தொடர்பாக தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அணை பலவீனமாக இருப்பதால் தமிழகம் கோரும் அளவுக்கு நீரைத் தேக்கி வைக்க இயலாது என்றும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே நல்ல தீர்வாக அமையும் என்றும் கேர்ள அரசு கூறி வருகிறது.
தென் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், விழிஞ்ஞத்தை மையமாகக் கொண்டு கேரளாவை முன்னணித் துறைமுக நகரமாக தமிழகம் ஒத்துழைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள அவர், இதன்மூலம் கேரளாவைக் கடல்சார் பொருளியல் மையமாக மாற்ற முடியுமெனத் தெரிவித்துள்ளார்.


