வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அரசு நலத் திட்டங்கள் இல்லை

மேற்கு வங்கம், பீகார் மாநில அரசுகள் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அரசு நலத் திட்டங்கள் இல்லை

1 mins read
cec9a9e7-442f-4547-bcbc-7e80e95439fe
சாம்ராட் சௌத்ரி தலைமையிலான பீகாரிலும், சுவேந்து அதிகாரி தலைமையிலான மேற்கு வங்கத்திலும் நலத்திட்டங்களை வழங்குவதற்கான அடிப்படையாக எஸ்ஐஆர் பெயர் பட்டியல் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. - படம்: நியூஸ்18

கோல்கத்தா/பாட்னா: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் (எஸ்​ஐஆர்) கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளைப் பெற முடி​யாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

எனினும், எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யில் பெயர் நீக்கப்​பட்​டதற்கு எதி​ராக முறை​யீடு செய்தவர்களுக்கு, தீர்ப்புத் தெரியும்வரை நலத்திட்ட உதவி தொடரும். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குடி​யுரிமைத் திருத்​தச் சட்​டத்​தின்கீழ் குடியுரிமை கோரி விண்​ணப்பித்​துள்​ளவர்​கள் அனைத்து அரசுத் திட்டங்​களை​யும் பெறலாம். குடும்ப அட்​டைகள் சரி​பார்க்கப்படும்,” என்று மேற்கு வங்க உணவு வழங்கல் துறை அமைச்​சர் அசோக் கீர்த்​தனியா கூறினார்.

எஸ்​ஐஆர் நடவடிக்கையின்கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளைப் பெறமுடி​யாது என்று மேற்கு வங்கம், பீகார் அரசுகள் அறிவித்துள்ளன.
எஸ்​ஐஆர் நடவடிக்கையின்கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளைப் பெறமுடி​யாது என்று மேற்கு வங்கம், பீகார் அரசுகள் அறிவித்துள்ளன. - படம்: மை மகான்ஹர்

அதேபோல், பீகாரில் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள், மலிவு விலை விற்பனைப் பொருள்​கள், பிற நலத்​திட்​டங்​கள் உட்பட எந்​தவொரு அரசு சலுகை​யை​யும் பெற முடி​யாது. இவர்களின் வங்கி கணக்குப் புத்​தகங்​களும் உரிய காலத்​தில் நீக்கப்​படும் என்று பீகார் முதல்​வர் சாம்​ராட் செளத்ரிஅறிவித்துள்ளார்.

மாநிலத்​தில் எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்குப் பிறகு, குடும்ப அட்​டை​தா​ரர்​களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 500,000 பேர்​ நீக்​கப்​பட்​டுள்​ளதாக பீகார் உணவு, நுகர்​வோர் பாது​காப்​புத் துறை அமைச்​சர் அசோக் சௌத்ரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்