தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புத்தாடைகள், புதுப் பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து சென்னையில் உள்ள துணிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மாலை வேளைகளில் போக்குவரத்து மக்கள் கூட்டத்தால் நிலைகுத்திப் போகிறது. இத்தகைய பகுதிகளில் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். படம்: சதீஷ்
தீபாவளி: அலைமோதும் மக்கள் கூட்டம்
1 mins read
-

