12 மணி நேரம் தவித்த இளையர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய இளையர் ஒருவர் வழியில் ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு 12 மணி நேரம் போராடிய நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் விலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர காஷ்யப் என்ற அந்த இளையர் கடந்த சனிக்கிழமை அன்று அங்குள்ள குடாகாட் அணைப் பகுதி அருகே இருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரும் பாதையில் நின்றிருந்த ஜிஜேந்திர காஷ்யப்பை வெள்ளம் அடித்துச் சென்றது.

எனினும் அதிர்ஷ்டவசமாக வெள்ளம் இழுத்துச்சென்ற பாதையில் சிறிய பாறையையும் அதன் அருகே உள்ள மரத்தையும் அவர் பார்த்துள்ளார். பின்னர் எப்படியோ அந்த மரத்தைப் பற்றிக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஜிஜேந்திர காஷ்யப்பின் நிலையைக் கண்ட சிலர் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளையர் மீட்கப்படும் காட்சி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பலரால் பகிரப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!