‘சீனாவால் இந்திய ராணுவத்துக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்த முடியும்’

ஷாங்ஹாய்: இந்தியாவின் ராணுவத்துக்கு சீனாவால் முன்பைவிட பெருத்த சேதத்தை ஏற்படுத்த முடியும் என்று சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளியிடப்படும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் நேற்று தெரிவித்தது.

இந்திய-சீன எல்லைப் பகுதியில் மீண்டும் இருதரப்பு ராணுவ வீரர்

களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அந்த நாளிதழ் இதைத் தெரிவித்தது. மேற்கு இமாலயப் பகுதியில் இருக்கும் எல்லைப்பகுதியில் இருக்கும் நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீன ராணுவம் முயன்றதாக இந்தியா நேற்று முன்தினம் தெரிவித்தது. சீன ராணுவத்தின் இந்த முயற்சியை தனது படையினர் முறியடித்ததாக அது கூறியது. இந்நிலையில், இந்தியப் படையினர் சீனாவின் எல்லையைத் தாண்டியதாக சீன ராணுவப் பேச்

சாளர் குற்றம் சாட்டினார். இந்தியா அதன் வீரர்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தனது ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியது. இந்தியாதான் பிரச்சினையைத் தொடங்கியது என்று குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

சக்திவாய்ந்த சீனாவை இந்தியா எதிர்நோக்குவதாகவும் இந்த எல்லைத் தகராற்றில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டும் என்ற மாயம் இந்தியாவுக்கு இருக்கக்கூடாது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!