123 நாடுகளுக்கு கொரோனா மருந்துகள் அனுப்பிய இந்தியா

123 நாடுகளுக்கு கொரோனா மருந்துகள் அனுப்பிய இந்தியா

2 mins read
00b7d616-fa3e-4ccd-ad5b-2e3381b11776
சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன். படம்: ஊடகம் -

புது­டெல்லி: அனை­வ­ரது சுகா­தார நல­னுக்­கா­க­வும் இந்­தியா எப்­போ­தும் பாடு­படும் என மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் கூறி­யுள்­ளார்.

சொந்­தத் தேவை­கள் இருந்­த­போ­தி­லும் கொவிட்-19 தொற்று நெருக்­கடி வேளை­யில் 123 நாடு­க­ளுக்கு கொரோனா தடுப்பு மருந்­து­களை இந்­தியா விநி­யோ­கித்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இவற்­றுள் 51 அணி­சேரா நாடு­களும் அடங்­கும் என நேற்று முன்­தி­னம் காணொளி வசதி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அணி­சேரா நாடு­க­ளின் சுகா­தார அமைச்­சர்­க­ளின் கூட்­டத்­தில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார். இந்­தக் கூட்­டத்­தில் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரா­ஸும் பங்­கேற்­றார்.

"கொவிட்-19க்கான பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது, சிகிச்சை அளிப்­பது, தடுப்­பூ­சி­களை மேம்­படுத்­து­வது தொடர்­பாக உல­க­ள­வில் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களில் இந்­தி­யா­வும் பங்­கேற்­றுள்­ளது.

"ஏனெ­னில் அனை­வ­ரும் பாது­காப்­பாக இருக்­கும் வரை யாரு­டைய பாது­காப்­பை­யும் உறு­தி­செய்ய இய­லாது என்­பதை இந்­தியா புரிந்து கொண்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன். அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட­வேண்­டும் என்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­கள் வேக­மெ­டுத்­துள்­ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்­கி­டையே இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­களில் தொடர்ந்து தடுப்­பூசி பற்­றாக்­குறை நிலவி வரு­கிறது.

இதை­ய­டுத்து வெளி­நா­டு­களில் இருந்து தடுப்­பூ­சி­களை இறக்­கு­மதி செய்ய மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

பிர­பல 'ஜான்­ஸன் அண்ட் ஜான்­ஸன்ஸ்' நிறு­வ­னத்­தின் கொரோனா தடுப்­பூ­சியை இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யும் பொறுப்பை ஏற்­றுள்­ளது 'பயோ­லா­ஜிக்­கல் இ' நிறு­வ­னம். எனி­னும் அந்­தத் தடுப்­பூ­சி­களை இந்­திய நிறு­வ­னத்­தால் நேர­டி­யாக சந்­தைப்­ப­டுத்த இய­லாது. மொத்த உற்­பத்­தி­யை­யும் அமெ­ரிக்க நிறு­வ­னத்­தி­டமே ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­பதே இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான ஒப்­பந்­தம் என 'நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' இணை­ய­த்த­ளம் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும் 'பயோ­லா­ஜிக்­கல் இ' உற்­பத்தி செய்­யும் தடுப்­பூ­சி­களில் கணி­ச­மான ஒரு பகு­தியை வாங்க மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

எதிர்­வ­ரும் டிசம்­ப­ருக்­குள் 300 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை உற்­பத்தி செய்ய முடி­யும் என அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக நிதி ஆத­ரவை இந்­நி­று­வ­னம் கோரி­யுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

ஃபைசர் நிறு­வ­னம் ஏற்­கெ­னவே 50 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை தரு­வ­தா­க­வும் 12 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு அவற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றும் கூறி­யுள்­ளது. இதற்­கி­டையே மகா­ராஷ்­டிரா, டெல்லி உள்­ளிட்ட மாநி­லங்­கள் நேர­டி­யாக வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து தடுப்­பூ­சி­களை வாங்க திட்­ட­மிட்­டுள்­ளன. இதற்­காக உல­க­ள­வில் ஒப்­பந்தப் புள்­ளி­கள் கோரப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், மாநில அர­சு­கள் நேர­டி­யாக உலகச் சந்­தை­யில் போட்­டி­யி­டு­வதை விட மத்­திய அரசு தடுப்­பூ­சி­களை வாங்க வேண்­டும் என அவை வலி­யு­றுத்தி வரு­வ­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது. இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் தடுப்­பூசி தட்­டுப்­பாடு 6 வாரங்­க­ளுக்­குத்­தான் இருக்­கும் என்று மத்­திய அரசு இரு தினங்­க­ளுக்கு முன்பு தெரி­வித்­தி­ருந்­தது.