ஹெலிகாப்டர் விபத்து; வருண் சிங் உடல் தகனம்

ஹெலிகாப்டர் விபத்து; வருண் சிங் உடல் தகனம்

2 mins read
3b7b3c2a-0868-44f6-989d-a5a92a32c1f2
போபாலுக்கு வருண் சிங் உடல் எடுத்துச் செல்வதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படைத் தளத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. -

போபால்: இம்­மா­தம் 8ஆம் தேதி நீல­கிரி மாவட்­டத்­தில் நிகழ்ந்த ஹெலி­காப்­டர் விபத்­தில் முப்­ப­டை­ க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத், அவ­ரது மனைவி மது­லிகா ராவத் மற்­றும் ராணுவ வீரர்­கள் உட்­பட 13 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதில் கேப்­டன் வருண் சிங் மட்­டும் 80 விழுக்­காடு தீக்­கா­யங் ­க­ளு­டன் உயி­ரு­டன் மீட்­கப்­பட்டு அவருக்கு பெங்­க­ளூ­ரு­வில் உள்ள விமா­னப்­படை மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

அவ­ருக்கு தீவிர சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் அவர் தொடர்ந்து கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்டது. இந்த நிலை­யில் சிகிச்சை பல­ன் அ­ளிக்­கா­மல் வருண்­ சிங் புதன் ­கி­ழமை உயி­ரி­ழந்­தார்.

இதை­ய­டுத்து வருண் சிங்­கின் உடல் வியா­ழக்­கி­ழமை காலை பெங்­க­ளூ­ரு­வில் உள்ள எல­கங்கா விமா­னப்­படைத் தளத்­தில் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டது. அங்கு அவ­ரது உட­லுக்கு கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை உள்­பட பல்­வேறு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள், அமைச்­சர்­கள், எம்­எல்ஏக்கள் என பல­ரும் அஞ்­சலி செலுத்­தி­னர். விமா­னப்­படை சார்­பி­லும் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

அதை­ய­டுத்து அவ­ரது உடல் வியா­ழன் காலை 10 மணிக்கு சிறப்பு விமா­னம் மூலம் மத்­திய பிர­தேச மாநில தலை­ந­கர் போபா­லுக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. வருண் சிங்­கின் குடும்­பத்­தி­ன­ரும் உடன் சென்­ற­னர். அன்று மதி­யம் மூன்று மணிக்கு அவ­ரது உடல் போபா­லைச் சென்று அடைந்­தது.

அங்கு வருண் ­சிங் உட­லுக்கு அம்­மா­நில முதல்­வர் சிவ­ராஜ்­சிங் சவு­கான் அஞ்­சலி செலுத்­தி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்­வர், வருண் ­சிங் குடும்­பத்­துக்கு ரூ.1 கோடி நிதி­யு­த­வி­யும் குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்கு அரசு வேலை­யும் வழங்­கப்­படும் என்று அறி­வித்­தார். வருண் சிங்­குக்கு சிலை எழுப்­பப்­படும் என்­றும் ஒரு நிறு­வ­னத்­துக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார். வருண் சிங்கின் உடல் ராணுவ மரி­யா­தை­யு­டன் அடக்­கம் செய்­யப்­பட்­டது.