தொழிலதிபர் பியூஷ் ஜெயின் 14 நாள்கள் சிறையிலடைப்பு

தொழிலதிபர் பியூஷ் ஜெயின் 14 நாள்கள் சிறையிலடைப்பு

1 mins read
1ff46e53-6e7c-4f31-aa65-a52f0609f72a
நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட தொழிலதிபர் பியூஷ் ஜெயின். படம்: ஊடகம் -

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச தொழி­ல­தி­பர் பியூஷ் ஜெயின் வீடு­களில் இருந்து ரூ.284 கோடி ரொக்­கப் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அவரை 14 நாள்­கள் சிறை­யில் அடைக்க நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

உத்­த­ரப் பிர­தேச முன்­னாள் முதல்­வர் அகி­லேஷ் யாத­வுக்கு நெருக்­க­மா­ன­வர் என்று கரு­தப்­படும் பியூஷ் ஜெயின், வரு­மான வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தாக பல்­வேறு புகார்­கள் எழுந்­துள்­ளன.

இதை­ய­டுத்து, அவ­ருக்­குச் சொந்­த­மான இடங்­களில் வரு­மான வரித்­து­றை­யி­னர் கடந்த சில தினங்­க­ளாக தீவிர சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது அவ­ரது வீடு­களில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த ரூ.284 கோடி ரொக்­கப் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

மேலும், 25 கிலோ தங்க நகை­களும் 250 கிலோ வெள்­ளி­யும் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­து­டன், ரூ.400 கோடி மதிப்­புள்ள சொத்து ஆவ­ணங்­களும் சிக்­கின.

அவ­ரி­டம் ஐம்­பது மணி நேரம் துரு­வித்­து­ருவி விசா­ரணை நடத்­திய அதி­கா­ரி­கள், பின்­னர் நீதி­மன்­றத்­தில் அவை முன்­னி­லைப்­படுத்­தி­னர். இதை­ய­டுத்து, அவரை 14 நாள்­கள் நீதி­மன்­றக் காவ­லில் வைக்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

தொழி­ல­தி­பர் பியூஷ் ஜெயின் தமது பூர்­வீக வீட்­டுக்கு வரும்­போது மிக­வும் எளி­மை­யாக காணப்­ப­டு­வார் என்­றும் பழைய இரு­சக்­கர வாக­னத்­தைத்­தான் பயன்­ப­டுத்­து­வார் என்­றும் அப்­பகுதி மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும் வீட்­டின் முன் இரண்டு பழைய கார்­க­ளை­யும் அவர் வைத்­துள்­ளார்.

அப்­ப­டிப்­பட்­ட­வ­ரி­டம் ரொக்­க­மாக பல கோடி ரூபாய் இருந்­ததை அறிந்து அப்­ப­குதி மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.