இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மணிப்பூரில் தொடங்கினார் ராகுல்

1 mins read
e318eff6-e698-4f38-a458-6a08c93db39d
 ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’  எனும் நடைபயணத்தை மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்திலிருந்து ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கடந்த ஆண்டு நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, அவா் தலைமையில் காங்கிரசின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பயணம் மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

கிட்டத்தட்ட 6,713 கி.மீ. தொலைவு வரைக்கும் மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பயணம், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது. மாா்ச் 20 அல்லது 21-ஆம் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்புச் சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டவும், கடந்த 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எனினும் விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்