வீட்டை நூலகமாக மாற்றியவருக்கு பத்மஸ்ரீ விருது

ஹைதராபாத்: தெலுங்கானாவின் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விட்டலாச்சார்யா குரெல்லா. அவருக்கு வயது 86. சிறுவயது முதலே புத்தக விரும்பியான இவர், தெலுங்கு ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் கல்லூரி முதல்வராக கடந்த 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

2014 ஆம் ஆண்டு எல்லங்கியில் உள்ள தனது வீட்டை நூலகமாக மாற்றினார் குரெல்லா. தனது நண்பர்கள், உறவினர்களை நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

தொடக்கத்தில், 5 ஆயிரம் புத்தகங்கள் இருந்த நூலகத்தில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

நூலகத்திற்காக தனது வீட்டில் கூடுதலாக ஒரு தளத்தையும் கட்டியுள்ளார் குரெல்லா.

உஸ்மானியா பல்கலைக்கழகம், காக்காத்தியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் ஆய்வு மாணவர்களையும் மாநிலம் முழுவதிலும் இருக்கும் புத்தக விரும்பிகள், மாணவர்களை இந்த நூலகம் ஈர்த்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன் மனதின்குரல் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரெல்லாவின் இந்தச் சேவையைப் பாராட்டினார். இந்நிலையில் விட்டாலாச்சார்யா குரெல்லாவுக்கு பத்மஸ்ரீ விருது இவ்வாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குரெல்லா கூறும்போது, “இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலுங்கானாவுக்கும் கிடைத்த பெருமை. மக்களின்வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்க இது ஊக்கமளிக்கிறது” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!