மனைவியின் மூக்கை அறுத்த கணவர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய 48 வயதான மனைவியின் பெயர் சுதா.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுதா தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர் வீட்டுக்கு சுதா சென்றார். இதையறிந்து அங்கு வந்த அனில்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் வைத்திருந்த கத்தியால் மனைவியை அனில்குமார் குத்த முயன்றார்.

அப்போது சுதாவின் மூக்கில் கத்தி பட்டு படுகாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அனில்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மூக்கு அறுபட்ட நிலையில் சுதா திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போத்தன் கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அனில்குமாரைத் தேடி வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!