வருகை பாதையைத் தவறவிட்ட இண்டிகோ விமானம்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானம் ஒன்று நிர்ணயிக்கப்பட்ட வருகை பாதையில் (எக்சிட்வே) செல்லத் தவறியது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11 பிப்ரவரி) காலை நிகழ்ந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானம் ஓடுபாதையில் நின்றது. வேறு வாகனத்தைக் கொண்டு (tow) அது விமான நிறுத்துமிடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

அதனால் பல நிமிடங்களுக்கு மற்ற விமானங்கள் ஓடுபாதையில் போக முடியாமல் இருந்தது.

சுற்றுச்சூழல் மங்கலாக இருந்ததால் 6E 2221 என்ற எண்ணைக் கொண்ட இண்டிகோ விமானம் வருகை பாதையைத் தவறவிட்டதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அவ்விமானம் அம்ரித்சார் நகரிலிருந்து புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

இதையடுத்து இண்டிகோ, பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. உள்ளூர் நேரப்படி காலை 7.20 மணிக்கு அம்ரித்சாரிலிருந்து புறப்பட்ட விமானம் 8.35 மணிக்கு புதுடெல்லியில் தரையிறங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!