பெங்களூரு உணவக வெடிகுண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் காயம்

பெங்களூரு: இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

‘ராமேசுவரம் கஃபே’ எனும் அந்தப் புகழ்பெற்ற உணவகம், குண்டலஹள்ளி வட்டாரத்தில் அமைந்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு தேசியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், காவல்துறையினர், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் வல்லுநர் குழு, தடயவியல் வல்லுநர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தாக்குதலில் வெடிபொருளை வெடிக்கச் செய்யும் கருவி பயன்படுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்ததாக முதல்வர் கூறினார்.

“பிற்பகல் 12.30 மணியளவில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் பை ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது,” என்றார் அவர்.

காயமடைந்த ஒன்பது பேரும் புரூக்ஃபீல்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர்களில் யாரும் அபாயக் கட்டத்தில் இல்லை என்றும் காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!