ஜார்க்கண்ட்டில் சுற்றுப்பயணிக்கு நேர்ந்த கொடூரம்: கணவர் முன்னிலையில் பெண்ணைச் சீரழித்த கும்பலில் மூவர் கைது

ஜார்க்கண்ட்: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குத் தன் கணவருடன் மோட்டார்வண்டி சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டுப் பெண், ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார்வண்டியில் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்ற தம்பதி, இரவு நேரமானபோது ஜார்க்கண்ட்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்திகா பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைத்துத் தங்கியிருந்தனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளையர் கூட்டம் தம்பதியைத் தாக்கினர்.

மார்ச் 1ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தில் கணவரின் முன்னிலையில் அந்தப் பெண்ணை கும்பல் சீரழித்ததாகக் கூறப்படுகிறது.

அவ்வழியாக வந்த சுற்றுக்காவல்துறை அதிகாரிகள், காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்தபோதுதான் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை ஒன்றைக் காவல்துறையினர் அமைத்து அந்தக் கும்பலைத் தேடி வருகிறது.

மார்ச் 2ஆம் தேதியன்று சிக்கிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!